இது எங்களோட தீபாவளி பரிசு.. மாநில மக்களுக்கு அரசின் அசத்தல் அறிவிப்பு – அமைச்சர் முக்கிய தகவல்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய மக்கள் முழுவதும் கோலாகலமாக தயாராகி வரும் வேளையில் குஜராத் அரசு சூப்பர் அறிவிப்பை மாநில மக்களுக்கு வெளியிட்டு உள்ளது.
அரசு அறிவிப்பு:
இந்தியாவில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மக்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலமாக சிறப்பு பொருட்களை தீபாவளியை முன்னிட்டு வழங்கி வருகின்றன.
பிரதமர் மோடியின் Rozgar Mela திட்டம்.. 10 லட்சம் வேலைவாய்ப்பு – இன்று தொடங்கி வைப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் பாரத பிரதமர் மோடி அவர்கள் 75,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை தீபாவளி பரிசாக வழங்க உள்ளார். இந்நிலையில் குஜராத் அரசு ஒரு சூப்பர் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது அம்மாநில அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகன ஓட்டிகளிடம் இருந்து எந்த ஒரு அபராதத்தையும் வரும் 27 ஆம் தேதி வரை வசூலிக்காது என தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இருப்பினும் இந்த அறிவிப்பால் மக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றக்கூடாது என்று அர்த்தம் இல்லை. ஏதேனும் அறியா தவறு செய்தால் அபராதம் கட்ட தேவையில்லை என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் வரும் 27 ஆம் தேதி வரை குஜராத் போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளிடம் எந்த ஒரு அபராதத்தையும் வசூலிக்காது.