தனியார் துறையில் 75% வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடிவு – அரசு அதிரடி!

0
தனியார் துறையில் 75% வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடிவு - அரசு அதிரடி!
தனியார் துறையில் 75% வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடிவு - அரசு அதிரடி!
தனியார் துறையில் 75% வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடிவு – அரசு அதிரடி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு 75% தனியார் துறையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலும், இதற்காக ஒரு போர்ட்டலையும் நிறுவியிருக்கிறது.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் அரசாங்கம் இளைஞர்களுக்கு தனியார் துறையில் 75% வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், இதற்காக ஜர்னி யோஜனா என்கிற போர்ட்டலையும் ஜார்க்கண்ட் அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இந்த போர்ட்டலில் அனைத்து தனியார் நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஜர்னி யோஜனா போர்ட்டல் மூலமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவும் வணிகம் மற்றும் மனித வளம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம் எனவும், வேலைதேடும் இளைஞர்களுக்கும் தனியார் நிறுவனத்திற்கும் இந்த போர்ட்டல் நல்ல பாலமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயல்திட்டங்களை கண்காணிக்க தொழிலாளர் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!