சாலையோர விலங்குகளுக்கு உணவளிக்க அரசு நிதி ஒதுக்கீடு – உயர் நீதிமன்றம் பாராட்டு!
கொரோனா பரவல் காரணமாக உணவு கிடைக்காமல் தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க தமிழக அரசு 9 லட்ச 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த செயலுக்காக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டுதலை தெரிவித்துள்ளது.
விலங்குகளுக்கு உணவு
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொது இடங்களில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உணவு கிடைக்காமல் தவித்து வந்தது. அந்த விலங்குகளுக்கு உணவளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
யூ ட்யூப் (You Tube) பயனர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!!
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 14) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ‘சாலையோரம் ஆதரவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க தமிழக ஆளுநர் 10 லட்ச ரூபாய் நிதியும், தமிழக அரசு 9.20 லட்சம் ரூபாய் நிதியும் அளித்ததற்காக நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் சார்பில் அரசுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து, வரும் நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தெரு விலங்குகளுக்கு தடையில்லாமல் உணவு கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர சாலையோர விலங்குகளின் பாதுகாப்பு, கருத்தடை முறையையும் செய்வதற்கு அரசு திட்டம் வகுக்க வேண்டும். மேலும் தனியார் மூலம் யானைகள் வளர்ப்பதற்கு தடை விதிப்பது குறித்து எதிர்காலத்தில் நீதிமன்றம் பரிசீலிக்கும்’ என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.