தமிழகத்தில் ஜூன் 7 முதல் கடைகளை திறக்க அனுமதி? அரசு ஆலோசனை!
தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதிக்கு பின்பாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என வணிகர்கள் சங்க தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கடைகள் திறப்பு
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் 2 வார ஊரடங்கின் போது காய்கறி, மளிகை கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக அறிவிக்கப்பட்ட தளர்வில்லா பொது முடக்கத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் பொது மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் காணப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளை அளிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தின் அனைத்து மளிகை மற்றும் காய்கறி கடைகளை திறக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக வணிகர்கள் சங்க தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்புடன் ஆலோசனை மேற்கொண்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – கணக்கு முடக்கம்?
அப்போது, ‘தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு முடிவுக்கு வருவதால், கொரோனா குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் கடைகளை திறப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மே 10 முதல் 24 வரை அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட உள்ள தளர்வுகளில் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டால் அவை செயல்படும் நேரத்தை சில மணி நேரம் அதிகரிக்க வேண்டும் என்று தலைமைச் செயலரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.