மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் மீண்டும் சம்பள உயர்வு – அரசு ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் அடுத்த மாதம் வீட்டு வாடகை படி உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. அதன் பின் 17% ஆக இருந்த அகவிலைப்படி 1% அதிகரிக்கப்பட்டு மொத்தம் 28% ஆக வழங்கப்பட்டது. அதன் பின் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 விழுக்காடு உயர்த்தப்பட்டு 31 விழுக்காடாக அதிகரித்தது. அதனுடன் சேர்த்து தீபாவளி படியும் உயர்த்தப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் கொடுக்காமல் இருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகையும் வழங்கப்பட்டது.
வாரத்தில் 3 நாட்கள் வகுப்புகள், 3 நாட்கள் விடுமுறை – CBSE வாரியம் முக்கிய முடிவு!
இதனால் மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கும் நேரத்தில், தற்போது மற்றொரு மகிழ்ச்சி செய்தி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பின் படி அடுத்த மாதமே மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகிற ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப் படி உயர்த்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அஞ்சலி ஸ்வீட்டியின் அம்மா யார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்!
மேலும் வீட்டு வாடகை படியை உயர்த்துவது குறித்த முன்மொழிதல் ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வீட்டு வாடகை படியை உயர்த்தும்படி அரசிடம் ரயில்வே ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அதனால் வீட்டு வாடகை படியை உயர்த்துவதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒப்புதல் கிடைத்தால் சுமார் 11.56 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.