பிப்ரவரி 25 முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து? அரசு ஆலோசனை!
தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பிப்ரவரி 25 முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அரசு ஆலோசினை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு
தேசிய தலைநகரில் கொரோனா 3ம் அலைத்தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த வார இறுதி முழு முடக்கத்தில் இருந்து அரசு தளர்வுகளை அளித்திருக்கும் நிலையில், மீதமுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) வரும் பிப்ரவரி 25ம் தேதியன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறது. இந்த ஆலோசனையில் இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம், இரவு 8 மணி வரை அத்தியாவசியமற்ற கடைகள் திறப்பு, பார்கள் மற்றும் உணவகங்களில் 50% இருக்கை வசதி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு திடீர் விளக்கம்!
இது குறித்து நேற்று (பிப்.22) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘ஜனவரி 2022 மாதத்தில் தொற்றுநோயின் உச்சநிலையுடன் ஒப்பிடும்போது கொரோனா மற்றும் நேர்மறை விகிதத்தின் புதிய பாதிப்புகள் மிகவும் குறைந்துள்ளன. இதனால் மீதமுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து விவாதிக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) வரும் பிப்ரவரி 25ம் தேதியன்று கூடும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக டெல்லியில் சமீபத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு, மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பாதி இருக்கை வசதி, மல்டிபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகள் மூடல் போன்ற பல கட்டுப்பாடுகளை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம் நீக்கி இருந்தது. இருப்பினும், நகராட்சி மண்டலத்தில் ஒரு வாரச் சந்தைக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு, பேருந்துகள் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில்களில் நின்று பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – சேரப்போகும் பாரதி, கண்ணம்மா & ஹேமா!
அதே நேரத்தில் பிப்ரவரி 4 அன்று நடந்த DDMA கூட்டத்தில் இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது டெல்லியில் கடந்த ஒரு நாளில் 498 புதிய கொரோனா பாதிப்புகளுடன் ஒரு இறப்பு மட்டும் பதிவாகி உள்ளது. அதே போல கொரோனா நோய்த்தொற்றுகளின் நேர்மறை விகிதம் 1%க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.