தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அதிகரிக்கும் ஊழல்? அரசு அதிரடி நடவடிக்கை!

0
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அதிகரிக்கும் ஊழல்? அரசு அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அதிகரிக்கும் ஊழல்? அரசு அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அதிகரிக்கும் ஊழல்? அரசு அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் ஊழல் நடைபெறுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதை தடுக்க மூட்டைகளில் கியூ ஆர் கோடு முறை செயல்படுத்த உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு:

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா கால நெருக்கடியில் மக்களுக்கு 1000 ரூபாய் உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக கோதுமை, அரசி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தற்போது ரேஷன் கடைகளில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதாவது மக்கள் வீடுகளில் இருந்து ரேஷன் கடைகள் திறந்திருப்பது குறித்து தெரிந்து கொள்ள ஆன்லைன் மூலம் சிறப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதை அடுத்து மக்களுக்கு சரியான முறைகள் உணவுவ பொருட்கள் வழங்கப்படவில்லை என்றால் புகார்கள் தெரிவிக்க தனி இணையதளம் பக்கத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை தவிர ரேஷன் கடைகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை தவிர மற்றவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 7,946 பேருக்கு உறுதி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் ஊழல்கள் நடைபெறுவதாக பல தரப்புகளில் இருந்து புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதாவது, ரேஷன் கடைகளில் உள்ள அரசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை தடுக்க அரசு தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தகவல் அளித்திருந்தது. இருப்பினும் தொடர்ந்து உணவு பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. இந்த நிலையில் இதனை தடுக்கும் விதமாக அரசு மூட்டைகளில் க்யூ ஆர் கோடை அச்சிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள எந்த குடோனில் இருந்து கடத்தப்பட்டு உள்ளது என தெரிந்து கொள்ள இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!