நாட்டில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு அதிரடி உத்தரவு – அக்.25ம் தேதி முதல் புதிய விதிமுறை அமல்!!
நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாகன ஓட்டிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாடு
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வாகனங்களில் இருந்து அதிகப்படியான புகை வெளியாகி காற்று மாசுபாடு அடைகிறது. மேலும் காற்று மாசுபாடானது பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்ளிட்ட பொருட்கள் எரிப்பதாலும் காற்றானது மாசடைகிறது. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது டெல்லியில் மற்ற இடங்களில் இல்லாத அளவுக்கு அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்படுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அரசின் சூப்பர் அறிவிப்பு!
இதற்கு முக்கிய காரணமாக வாகனங்களில் எண்ணிக்கை அதிகரிப்பு தான். மேலும் இதிலிருந்து வெளியாகும் புகையானது காற்றை அசுத்தப்படுகிறது. இந்த அசுத்த காற்றை பொதுமக்கள் சுவாசிப்பதால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படும். அதனால் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் விதமாக டெல்லி அரசாங்கம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டெல்லியில் காற்று மாசுபாடு அடைவதை கட்டுப்படுத்த முதற்கட்ட நடவடிக்கையாக அனைத்து வாகனங்களுக்கும் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்பப்பட வேண்டும் எனவும் இச்சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு நிரப்பப்படக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையானது வருகிற அக்டோபர் 25ம் தேதியில் இருந்து அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர தீவிர நடவடிக்கையை டெல்லி அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்