அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு – அரசின் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்த பிறகு அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களும் தங்களின் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்க முன் வந்துள்ளன. அந்த வகையில் தற்போது குஜராத் மாநில அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 2021ம் ஆண்டு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 28% அகவிலைப்படியை பெற்றனர். இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த ஜூலை மாதம் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதையடுத்து 31% அகவிலைப்படி பெற்று வந்தனர். இதையடுத்து இந்த ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு தற்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் குஜராத் அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பாரதி – இவருக்கு பதில் இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!
மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு 2021ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு குஜராத் மாநிலம் உருவான நாளான மே 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அகவிலைப்படிக்கான 10 மாத நிலுவை தொகையை 2 தவணையாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் முதல் தவணையை இந்த மாதத்திலும், 2ம் தவணையை ஜூன் மாதத்திலும் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1,217.44 கோடி கூடுதலாக செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.