அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – இடமாற்றங்களுக்கு கிரீன் சிக்னல்!
மாநிலத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான இட மாறுதல் செயல்முறை உடனடியாக தொடங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது இது தொடர்பாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளதை பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
இடமாறுதல்:
ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாத தொடக்கத்தில் அரசு பள்ளிக்கல்வியின் தரம் குறைவாக இருப்பதால் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கு வெளியே பணிகள் அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது தேர்தல் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்களுக்கான பணி இட மாறுதல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் இதற்கு அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளதாவது, நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் செயல்முறை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை புரட்டி போடும் மழை.. இவங்கெல்லாம் கவனமா இருக்கனும் – மருத்துவர்கள் அறிவுரை!
Exams Daily Mobile App Download
கடந்த 2020ம் ஆண்டில் ஆசிரியர்களுக்கான இட மாறுதல் தொடங்கப்பட்டாலும் 2021ம் ஆண்டில் தான் இதற்கான பணிகள் முடிவடைந்தது என்று கூறியுள்ளார். ஆனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக இட மாறுதல் பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான அறிவிப்புகள் 12ம் தேதிக்குள் வெளியாகும் என்றும் இந்த முறை ஆன்லைன் வாயிலாக ஆசிரியர்களுக்கான இட மாறுதல் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.