குடும்பத்திடம் மாட்டிக் கொண்டும் திருந்தாத கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அனைவரும் எதிர்பார்த்தது போல கோபி வீட்டில் வசமாக மாட்டிக் கொள்ள கதைக்களம் சூடுபிடித்துள்ளது. பெற்ற பசங்க முன்னிலையில் அவமானப்பட்டதை நினைத்து கோபி வருத்தப்படுவது போல காட்டப்பட்டாலும் இனி வரும் எபிசோடுகளில் கோபி திருந்துவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடங்கத்தில் சந்தோசமான குடும்பத்தை காட்டினாலும் அதன் பின் கோபி அந்த குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகாவுடன் உறவை வளர்த்துக் கொள்ள நினைக்கிறார். அதற்காக பல பொய்களை சொல்கிறார். சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு கோபியின் பொய் வேலைகள் தாங்க முடியாமல் கோபி எப்போது சிக்குவார் என எதிர்பார்த்து இருந்தனர். அதன்படி சென்ற வாரம் கோபி வசமாக சிக்கிக் கொண்டார்.
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 20ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
கோபி ராதிகா உறவை தெரிந்து கொண்ட பாக்கியா பசங்க முன்னிலையில் அவமானப்படுத்துவது போல பல கேள்விகளை கேட்கிறார். அதனால் பெற்ற பசங்க மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் கோபி அவமானப்பட்டு தலை குனிந்து நிற்கிறார். கோபி ஏமாற்றியது எல்லாம் தெரிந்து பாக்கியா பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். அதனால் குடும்பமே வருத்தத்தில் இருக்கின்றனர். பாக்கியா வீட்டிற்கு வர வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.
Exams Daily Mobile App Download
கோபியும் செய்த தவறை நினைத்து வருத்தப்படுவது போல காட்டப்படுகிறது. அதனால் கோபி திருந்தி விடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் அவர் திருந்தினால் கதை முடிந்துவிடும் என்பதால் இனிமேல் தான் கோபியின் சுயரூபம் வெளியே வர இருக்கிறது. ஆனால் கோபி எப்படி குடும்பத்தை விட்டு செல்வார், ராதிகா கோபியை ஏற்றுக் கொள்வாரா பாக்கியா என்ன ஆவர் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.