என்னது.. நீதான் கல்யாணத்துல சமைக்க போறியா? பாக்கியாவால் பேச்சு மூச்சில்லாமல் போன கோபி!
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது தன் முன்னாள் கணவரின் திருமணத்திற்கு தான் சமைக்கப் போகிறோம் என்று அறியாமலேயே பாக்கியா விறுவிறுப்பாக கோபி ராதிகா திருமணத்திற்கு சமைக்க தயாராகி வருகிறார்.
பாக்கியலட்சுமி:
சின்னத்திரையில் தற்போது உச்ச கட்ட பரபரப்பில் ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி ராதிகாவின் திருமண ஏற்பாடுகள் தற்போது மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் காட்டப்பட்டு வருகிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்யப்போகும் விஷயம் தற்போது வரை ராமமூர்த்தி ஈஸ்வரிக்கு மட்டுமே தெரியும்.
ஈஸ்வரி. ராமமூர்த்தி எவ்வளவு சொல்லியும் கோபி கேட்டபாடில்லை. அதுமட்டுமில்லாமல் கோபி ராதிகாவின் திருமண சமையல் காண்ட்ராக்ட் ஆர்டர் பாக்கியாவிற்கு தான் கிடைக்கிறது. கோபிக்கு, பாக்கியா தான் தன் திருமணத்தில் சமைக்க போகிறார் என்ற உண்மை கல்யாண மண்டபத்தில் தான் தெரிய வருகிறது.
Exams Daily Mobile App Download
பாக்கியாவை மண்டபத்தில் பார்த்ததும் திருடனுக்கு தேள் கொட்டியது போல ஆகிறார் கோபி. இருந்தாலும் திருமணத்தில் எந்த ஒரு சங்கடமும் வரக்கூடாது என்பதற்காக கோபி வாயை மூடிக் கொண்டிருக்கிறார். மணக்கோலத்தில் தன் மாஜி கணவரை பார்த்ததும் சுக்குநூறாக உடைந்து போகிறார் பாக்கியா. இருப்பினும் தன் வேலை தான் முக்கியம் என சமைக்க முடிவு செய்கிறார். இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்