ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி – உண்மை அறிந்த எழில், சீரியலில் அடுத்த திருப்பம்!
ராதிகாவை தான் கோபி திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற விஷயம் ராமமூர்த்தி தாத்தாவை தவிர யாருக்கும் தெரியாமலே இருந்தது. ஆனால், தற்போது எழிலும் கோபியை பற்றிய உண்மையை அறிந்து கொள்ளும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை ராதிகா எப்போது தான் தெரிந்து கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் ஏற்கனவே ராமமூர்த்தி தாத்தாவிற்கு தெரியும். செல்விக்கும், எழிலுக்கும் கோபி மீது சந்தேகம் இருக்கிறது. இந்த சமயத்தில் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவை குடும்பத்தினர்கள் கொண்டாட இருக்கிறார்கள்.
Exams Daily Mobile App Download
பிறந்தநாள் விழாவிற்கு கண்டிப்பாக வருங்கால கணவரையும் அழைத்து வர வேண்டும் என பாக்கியா கூறுகிறார். கண்டிப்பாக பிறந்தநாள் விழாவிற்கு வர வேண்டும் என ராதிகா கோபியை வற்புறுத்தியதால் நெஞ்சு வலிப்பது போல நடிக்கிறார். கோபிக்கு நெஞ்சு வலி இருப்பதால் ராதிகா மட்டும் பிறந்தநாள் விழாவிற்கு செல்ல தயாராகுகிறார். பின்பு, ராதிகா வீட்டிற்கு வரும் நேரம் பார்த்து வீட்டின் பின்பக்க வாசல் வழியே தப்பி ஓடுகிறார். எதற்காக ராதிகா வீட்டிற்கு வரும்போது மட்டும் கோபி இவ்வாறு பதறி கொண்டிருக்கிறார் என குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தேகம் வருகிறது.
பிறகு எப்படியோ பொய் சொல்லி தப்பித்து கொண்டே இருக்கிறார். இதற்கு நடுவே ராமமூர்த்தி தாத்தாவிற்கும் பேச்சு வருகிறது. ராதிகா வீட்டிற்கு வரும் சமயம் பார்த்து அனைத்து உண்மைகளையும் தாத்தா கூறிவிடுவாரோ என கோபி பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில், எழிலிடம் தாத்தா கோபி ராதிகாவை தான் திருமணம் செய்து கொள்ள போகிறார் என அனைத்து உண்மைகளையும் கூறி விடுகிறார். பின்பு, எழில் கோபியிடம் சண்டை போடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.