‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவை திருமணம் செய்யும் கோபி? அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகாவை திருமணம் செய்யும் கோபி? அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகாவை திருமணம் செய்யும் கோபி? அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவை திருமணம் செய்யும் கோபி? அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பாக்கியாவின் அதிரடி முடிவால் குடும்பமே நிலைகுலைந்து போய் உள்ளது. இந்நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல் :

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் பொய், பித்தலாட்டம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. பாக்கியா , கோபி – ராதிகாவின் உறவை பற்றி தெரிந்து கொண்டார். ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வரும் கோபியை நிக்க வைத்து கேள்வி கேட்கிறார், பாக்கியா. மொத்த குடும்பமும் பாக்கியா பக்கம் தான் நிற்கின்றனர். கோபியை இதுவரையில் எந்த இடத்திலும் ஈஸ்வரி அம்மா விட்டுக்கொடுத்ததில்லை. ஆனால் இவ்வளவு பெரிய தப்பை கோபி செய்வார் என ஈஸ்வரி அம்மா எதிர்பார்க்கவில்லை. அந்த துக்கம், ஆத்திரத்தில் அவர் கோபியை அடித்து விடுகிறார். கோபியும் இதை எதிர்பார்க்கவில்லை.

Exams Daily Mobile App Download

மேலும் மகன்கள், மகள், மருமகள் என குடும்பமே கோபியின் இந்த துரோகத்தால் உறைந்து போய் நின்றனர். அதேநேரம் கோபி – பாக்கியா விவாகரத்து குறித்த நோட்டீஸ் வர, அதை பார்த்து மேலும் எரிமலையாய் வெடித்த பாக்கியா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். குடும்பமே பாக்கியவை தடுக்க முயற்சி செய்தும் பாக்கியா வீட்டை விட்டு சென்று விட்டார், அவரை பின் தொடர்ந்து எழிலும், செல்வியும் சென்றனர். மேலும் பாக்கியா, ஈஸ்வரி ஹோம் ஃபுட்ஸ் அதாவது பாக்கியா பிசினஸ் செய்யம் இடத்திற்கு சென்று விட்டார். அப்போது செல்வி, அக்கா நீ தப்பான முடிவு ஏதோ எடுத்துருவியோனோ பயந்துட்டேன், பரவலா நீ இங்க வந்துட்ட என்று கூறுகிறார்.

ஆதார் அட்டை பயனர்கள் கவனத்திற்கு – இதை செய்ய வேண்டாம்? முக்கிய எச்சரிக்கை!

மறுபுறம் பாக்கியா இல்லாமல் குடும்பமே வருத்தத்தில் உள்ளது. இனியா அம்மா அம்மா என்று அழுது கொண்டே இருக்கிறார். இதற்கிடையில் ராதிகா மும்பைக்கு செல்ல கிளம்புகிறார். இருப்பினும் ராதிகா அம்மா வரை போகவேண்டாம் என்று தடுக்கிறார். இதையடுத்து ராதிகா என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். பாக்கியா இனி தைரியமாக செயல்பட்டு தனது தொழிலில் முன்னேறி வருவார் என்றும், கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு பல பிரச்சனைகளை சந்தித்து, குடும்பம் தொழில் என அனைத்தையும் இழந்து நடுரோட்டில் நிற்பாரா? இதே நோக்கில் கதை நகர்ந்தால் நல்ல இருக்கும் என்று ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!