ராதிகாவை திருமணம் செய்து பாக்கியா வீட்டிற்கே அழைத்து வரும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!
கோபியின் குடும்பத்தை பார்த்தே தீர வேண்டும் என ஒத்த காலில் நின்று கொண்டிருந்த ராதிகாவை சமாளித்து திருமணம் செய்து கொண்டு பாக்கியாவின் வீட்டிற்கு ராதிகாவை அழைத்து செல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் உண்மையான குடும்பத்தை ராதிகா அறிந்து கொள்வாரா? என சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. கோபியும், ராதிகாவும் பேசி கொண்டிருப்பதை பார்த்து சந்தேகப்பட்டு ராதிகாவின் வீட்டிற்கு மூர்த்தி செல்கிறார். பாக்கியாவை இத்தனை நாட்களாக முட்டாளாக்கி ராதிகாவை தான் கோபி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதை மூர்த்தி அறிந்து கொள்கிறார். பின்பு, ராதிகாவும் கோபியை நம்பி முட்டாளாகி கொண்டிருக்கிறார் என்பதை மூர்த்தி அறிகிறார்.
Exams Daily Mobile App Download
ராதிகாவையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நீங்கள் அவரது குடும்பத்தை ஒரு முறை பாருங்கள். அதற்கு பிறகு நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்பதை முடிவெடுங்கள் என கூறிவிட்டு கிளம்புகிறார். மூர்த்தி சொன்னதுமே ராதிகாவிற்கு யோசனை வருகிறது. ஏன் இதுவரை குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படம் எதுவுமே காட்டியதில்லை என நினைக்கிறார். கோபி வந்ததுமே உங்களது குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை எனக்கு காட்டுங்கள் என கேட்கிறார். உடனே கோபி பதறி போகிறார். அதெல்லாம் காட்ட முடியாது என கூறுகிறார். காட்ட முடியாது என்றால் வீட்டை விட்டு கிளம்புங்கள் என ராதிகா கோவமாக திட்டுகிறார்.
‘பாக்கியாவை திருமணம் செய்ததால் தான் இவ்வளவு பிரச்சனை’ – திட்டி தீர்த்த கோபி! ப்ரோமோ ரிலீஸ்!
அதன் பின்னர் ராதிகாவை சமாளிப்பதற்காக போலியாக ஒரு குடும்பத்தை ரெடி செய்து ராதிகாவிடம் அறிமுகப்படுத்துகிறார். அடுத்தவரின் பேச்சை கேட்டு கோபியை நாம் சந்தேகப்பட்டு இருக்க கூடாது என ராதிகா வருந்துகிறார். இதற்கு மேலும் திருமணத்தை தள்ளி போட்டால் தேவையில்லாமல் இது போன்ற பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. இதனால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம் என ராதிகா கோபியிடம் கேட்கிறார். உடனே ராதிகாவும், கோபியும் திருமணம் செய்து கொண்டு பாக்கியாவின் வீட்டுக்கு ராதிகாவை அழைத்து செல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.