பாக்கியாவின் தொழிலை கவனிக்க சமையல்காரராக மாறும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா எல்லா பிரச்சனையும் முடிந்து நல்லபடியாக வீடு திரும்பி இருக்கின்றார். இந்நிலையில் இனிமேல் பிரச்சனை வேண்டாம் என்பதால் கோபி பாக்கியாவை வேலை செய்ய வேண்டாம் என சொல்கிறார். இந்த விஷயம் எழிலிற்கு தெரிய வர எழில் அதிரடி முடிவு ஒன்றை எடுக்க போகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா சாப்பாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என எழில் நிரூபிக்க அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பாக்கியாவை விடுதலை செய்கிறது. இந்நிலையில் பாக்கியா ஆபத்தான நிலையில் இருக்கும் போது கோபி அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட பின் காலையில் வீட்டிற்கு வந்து பாக்கியா எங்கே என கேட்கிறார். அதனால் ஈஸ்வரி கோவப்பட்டு பேச ராமமூர்த்தி முடியாத நிலையில் எழுந்து கோபியை அடித்துவிடுகிறார். அனைவரும் தாத்தாவை சமாதானம் செய்து வைக்கின்றனர்.
ExamsDaily Mobile App Download
அப்போது பாக்கியா வர அனைவரும் பாக்கியாவை பார்த்து சந்தோசப்படுகின்றனர். அப்போது கோபி பாக்கியாவிடம் எனக்கு முக்கியமான வேலை அதனால் தான் வர முடியவில்லை என மன்னிப்பு கேட்கிறார். பாக்கியா சரி என விட ஈஸ்வரி கோபியிடம் இனிமேல் சொல்லாமல் எங்கேயும் போகாதே என சொல்கிறார். பின் கோபி எனக்கு பிசினஸில் பல பிரச்சனை அதனால் தான் என்னால் வர முடியவில்லை என சொல்ல, பாக்கியா இனிமேல் சமையல் செய்ய வேண்டாம் அதனால் தான் இவ்வளவு பிரச்சனை என சொல்கிறார்.
பாக்கியா எதுவும் பேசாமல் இருக்க ஜெனியிடம் இது பற்றி எழிலிடம் சொல்ல வேண்டாம் என சொல்கிறார். நாளைய எபிசோடில் எழிலிடம் கோபி சொன்னது பற்றி ஜெனி சொல்கிறார். அதனால் கோவப்பட்ட எழில் பாக்கியாவிடம் இது பற்றி கேட்கிறார். ஆனால் பாக்கியா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் அடுத்து வர போகும் எபிசோடுகளில் பாக்கியாவின் தொழிலை கோபியும் சேர்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால் சீரியல் கதையில் பெரிய திருப்பம் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.