ராதிகாவிடம் வேறு பெண்ணை காட்டி மனைவி என சொல்லும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் மூர்த்தி ராதிகாவிடம் கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என சொல்லி எச்சரித்துவிட்டு சென்று விடுகிறார். இந்நிலையில் கோபி வேறு பெண்ணை காட்டி இது தான் என்னுடைய மனைவி என சொல்ல போகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் மூர்த்தி கோபியை எச்சரித்துவிட ஆனால் கோபி மூர்த்தியிடம் கோபப்படுகிறார். அதனால் மூர்த்தி ராதிகா வீட்டிற்கு சென்று கோபி நல்லவர் இல்லை என சொல்கிறார். அவரது குடும்பத்தையும், உங்களுடைய குடும்பத்தையும் அவர் ஏமாற்றுவதாக மூர்த்தி சொல்கிறார். அதனால் நீங்க கோபி குடும்பத்தை பார்க்க வேண்டும் என சொல்லுங்கள் என சொல்லி விட்டு மூர்த்தி தனமும் கிளம்பி விடுகின்றனர். அவர்கள் சொன்னதை நினைத்து ராதிகா குழப்பத்தில் இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அப்போது கோபிக்கு போன் செய்து ராதிகா வீட்டிற்கு வர சொல்கிறார். கோபி வர நான் உங்களது குடும்பத்தை பார்க்க வேண்டும் என ராதிகா சொல்கிறார். அதெல்லாம் முடியாது என கோபி சொல்ல, நான் இப்பவே பார்க்க வேண்டும் என ராதிகா சொல்கிறார். என்னால் முடியாது என கோபி சொல்ல அப்போ இந்த வீட்டை விட்டு வெளியே போங்க என ராதிகா கோபியை சொல்லி விடுகிறார். ராதிகாவிடம் கோபி உண்மையை சொல்வாரா என்பது இனி வரும் எபிசோடுகளில் பெரிய திருப்பமாக இருக்க போகிறது.
இனி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியாக களமிறங்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் ஷாக்!
கோபி உண்மையை சொன்னால் கண்டிப்பாக சீரியல் முடிவுக்கு வந்து விடும் என்பதால் கோபி தன்னுடைய திருவிளையாடல்களை காட்ட இருக்கிறார். அதாவது வேறு பெண்ணை செட் செய்து இது தான் என்னுடைய மனைவி என பொய் சொல்ல இருக்கிறார். ராதிகாவும் அதை நம்பிவிட இப்படியே மீண்டும் கோபியின் விளையாட்டுகள் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோபி இப்போதைக்கு சிக்கமாட்டார் என்பதால் ரசிகர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.