ராதிகாவை திருமணம் செய்தபிறகு பாக்கியாவின் அருமையை உணரும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீசன் 2 அறிமுகம்!
பாக்கியலட்சுமி தொடர் விரைவில் முடிவடைய போவதாகவும், சீசன்2 தொடர் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீசன்2 தொடரில் ராதிகாவை கோபி திருமணம் செய்தபிறகு பாக்கியாவின் அருமையை உணரும் படியாக கதைக்களத்தை கொண்டு செல்ல உள்ளனர்.
பாக்கியலட்சுமி சீசன் 2:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு அனைத்து உண்மைகளும் தெரியவருமா, உண்மைகள் தெரிய வந்த பிறகு ராதிகாவிற்கு கோபியை விட்டுக் கொடுக்கப் போகிறாரா அல்லது எனது கணவர் எனக்கு மட்டுமே சொந்தம் என உரிமை கொண்டாட போகிறாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியாவின் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோபி பாக்கியாவின் கண்ணுக்கு முன்னாடியே தவறு செய்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – நாளை செய்முறை தேர்வு தொடக்கம்!
ஒரு பெண் இந்த அளவுக்கு அப்பாவியாக இருக்கவே கூடாது என ரசிகர்கள் பாக்கியாவிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கின்றனர். என்னதான் பாக்கியா கோபியை விழுந்து விழுந்து கவனித்தாலும் ராதிகாவை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென கோபி துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற விஷயம் கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு ஏற்கனவே தெரிந்து விடுகிறது. ஆனால் பாக்கியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என பயந்து யாரிடமும் கூறாமல் கோபியை மட்டும் கண்டித்து விட்டு விடுகிறார். ஆனாலும், கோபியின் ஆட்டம் ஒழிந்த பாடில்லை. அதையும் சாதகமாக பயன்படுத்தி மேலும் மேலும் ராதிகாவை திருமணம் செய்யத்தான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.
இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாக்கியலட்சுமி தொடர் முடிவடைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீசன் 2 தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த சீசன்2 தொடரில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வது போலவும் பாக்கியா அளவுக்கு ராதிகா கோபியை கவனிக்காததால் பாக்கியாவின் அருமையை கோபி புரிந்து கொள்வது போலவும் கதைக்களத்தை கொண்டு செல்ல உள்ளனர். இதனால் சீசன் 2 தொடரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.