ராதிகாவின் கொடுமை தாங்காமல் அடிக்க கை ஓங்கிய கோபி – மூன்றே நாட்களில் வந்த விரிசல்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை ஏமாற்றி கோபி ராதிகாவை திருமணம் செய்துள்ள நிலையில்,அவர்களின் திருமண வாழ்க்கையில் மூன்றே நாட்களில் பெரிய விரிசல் விழுந்துள்ளது. ராதிகாவின் கொடுமை தாங்க முடியாமல் கோபி கை நீட்டி அடிக்க செல்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்களுடன் இணைந்து மகா சங்கமம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் கண்ணனும் ராமமூர்த்தியும் சேர்ந்து கோபி ராதிகாவை வெறுப்பேற்றுவதே வேலையாக வைத்திருக்கின்றனர். அதனால் புதிதாக திருமணம் முடிந்த கோபி ராதிகா இடையே அடிக்கடி சண்டை வருகிறது. இருக்க இருக்க கோபி நிலைமை மோசமாகி கொண்டே தான் இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் கோபிக்கு அவார்ட் நிகழ்ச்சி நடக்க அதில், விவரம் தெரியாத கோபியின் நண்பர் பாக்கியாவை அழைத்து பேச சொல்கிறார். பாக்கியாவும் பேச, அதனால் ராதிகாவுக்கு பயங்கர அவமானமாக இருக்கிறது. இதனால் பயங்கர கோவத்தில் இருந்த ராதிகா, கோபியிடம் பயங்கரமாக வாக்குவாதம் செய்கிறார். நீங்க சொல்லாமல் அவங்க எப்படி அங்கே வந்தார்கள், உங்க நண்பரிடம் விவாகரத்து பற்றி ஏன் சொல்லவில்லை. அப்போ என்னை கூப்பிட்டு அவமானப்படுத்த தான் இப்படி எல்லாம் செய்தீர்களா.என பல கேள்விகளை கேட்கிறார்.
டிஎன்ஏ டெஸ்ட் முடிவை பார்த்து வெண்பாவிடம் சண்டை போடும் பாரதி – லேட்டஸ்ட் “பாரதி கண்ணம்மா” அப்டேட்!
Exams Daily Mobile App Download
நான் அவார்ட் வாங்கும் போது இப்படி வேறு ஒருவரை கணவர் என சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் என ராதிகா கேட்க,கோபி ராதிகா பேசுவதை கேட்க முடியாமல் கையை ஓங்கி அடிக்க செல்கிறார். அதனால் ராதிகா கோபி இடையே பெரிய விரிசல் வருகிறது. அதன் பின் வெளியே வந்த கோபி பாக்கியா தனது குடும்பத்துடன் நடனம் ஆடி மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து பொறாமைப்படுகிறார். இதெல்லாம் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது.