கோபியை பற்றிய உண்மையை தெரிந்துகொண்டு அதிர்ச்சியடையும் கோபியின் அம்மா – ப்ரோமோ ரிலீஸ்!

0
கோபியை பற்றிய உண்மையை தெரிந்துகொண்டு அதிர்ச்சியடையும் கோபியின் அம்மா - ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை பற்றிய உண்மையை தெரிந்துகொண்டு அதிர்ச்சியடையும் கோபியின் அம்மா - ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை பற்றிய உண்மையை தெரிந்துகொண்டு அதிர்ச்சியடையும் கோபியின் அம்மா – ப்ரோமோ ரிலீஸ்!

கோபியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் எப்படியாவது ராதிகா மற்றும் கோபியின் திருமணத்தை நிறுத்தியே தீரவேண்டும் என எழிலிடம் தாத்தா உதவி கேட்கிறார். தற்போது கோபியை பற்றிய உண்மையை கோபி அம்மா தெரிந்துகொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் சமீப நாட்களாக விருவிருப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராதிகாவை கோபி திருமணம் செய்துகொள்வாரா, அல்லது கடைசி நேரத்தில் பாக்கியா திருமணத்தை நிறுத்தி விடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற விஷயம் ஏற்கனவே கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும்.

Exams Daily Mobile App Download

ஆனால், ராமமூர்த்தி கோபியை கண்டித்த போது பாக்கியாவை விவாகரத்து செய்து விடுவேன் என மிரட்டுகிறார். இதன் காரணமாக பாக்கியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என பயந்து இந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் மறைத்து விடுகிறார். ஆனாலும் கோபியின் ஆட்டம் அடங்குவதாக தெரியவில்லை. இதனால் கோபியும் பாக்கியாவும் தான் கணவன் மனைவிகள் என்கிற விஷயத்தை ராதிகாவிடம் எப்படியாவது சொல்லியே தீரவேண்டும் என நினைத்து வீட்டில் கோபியும் பாக்கியாவும் ஒன்றாக இருக்கும் படியான ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு புறப்படுகிறார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பார்வதியை மிரட்டும் விக்கி!

ஆனால் ராமமூர்த்தி தாத்தா ராதிகா வீட்டிற்கு செல்வதற்கு முன்பே ராதிகா அந்த வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு சென்று விடுகிறார். எப்படியாவது கோபி மற்றும் ராதிகாவின் திருமணத்தை நிறுத்தியே தீரவேண்டும் என எழிலிடம் இது குறித்து பேசுகிறார். ஆனால் எழிலுக்கு ஏற்கனவே கோபி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற விஷயம் தெரியும். ஆனால், ராதிகாவை தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற விஷயம் தெரியாது. தற்போது எழிலிடம் தாத்தா அனைத்து உண்மைகளையும் கூறி உடனடியாக திருமணத்தை நிறுத்தும் படி கூறுகிறார். பின்பு, கோபியின் அம்மாவும் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்டு அதிர்ச்சி அடைவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!