ராதிகாவை திருமணம் செய்துகொள்ளும் கோபி, பரிதவிப்பில் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியா கோபியை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியதும் நேராக சென்று கோபி ராதிகாவை சந்திக்கிறார். இந்நிலையில், கோபியை ராதிகா பழையபடி ஏற்றுக்கொண்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி வீட்டை விட்டு செல்வாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் கோபிக்கும் ராதிகாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை பாக்கியாவிற்கு தெரியவந்துவிட்டால் பாக்கியாவின் நிலை என்னவாகும் என பயந்து கொண்டிருந்த நிலையில் தற்போது உண்மை தெரிய வந்த பிறகு பாக்கியா மிகவும் துணிச்சலாக இருக்கிறார். மேலும், நம்மை பிடிக்காதவர்களை நினைத்து நாம் ஏன் வருத்தப்பட வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் துணிச்சலாக செய்து கொண்டிருக்கிறார்.
மேலும், குடும்பத்தினர்கள் அனைவரும் பாக்கியாவை தடுத்தும் கூட பாக்கியா கேட்காமல் கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டாள். பின்னர், கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறுகிறார். உடனே, பாக்கியா கோபியின் துணிமணிகள் அனைத்தையும் பேக் செய்துவந்த கோபியை வெளியேறும்படி கூறுகிறார். இது தான் என் குடும்பம் என்னால் வெளியே செல்ல முடியாது நீங்கள் தான் செல்ல வேண்டும் என கோபியிடம் கூறுகிறார். உடனே, கோபி இந்த வீட்டிற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். இதனால், இந்த வீட்டிற்காக நான் செலவு செய்த பணத்தை கொடுக்க வேண்டும் என கோபி கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
உடனே, பாக்கியாவும் அதற்கு ஒப்புக்கொண்டு வீட்டிற்காக 40 லட்சம் தருகிறேன் என கூறுகிறார். இதற்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய கோபி நேராக ராதிகாவின் வீட்டிற்கு சென்று ராதிகாவை சந்திக்கிறார். ஆரம்பத்தில் கோபியை விட்டு விலக வேண்டும் என நினைத்த ராதிகா பிறகு மனசு மாற ஆரம்பித்துவிட்டார். பாக்கியாவிற்கும் கோபிக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை என ராதிகா கோபியை மீண்டும் ஏற்றுக்கொள்கிறார். இந்நிலையில், தற்போது ராதிகாவும் கோபியும் திருமணம் செய்துகொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்