மீண்டும் பொய் சொல்லும் கோபி, கோபப்பட்டு கன்னத்தில் அறைந்த பாக்கியா – சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுவரை அப்பாவி பாக்கியாவை பார்த்த நாம் இனி வரும் எபிசோடுகளில் ஆக்ரோஷமான பாக்கியாவை பார்க்க இருக்கிறோம்.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கதைக்களம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. கதையில் பெரிய திருப்புமுனையாக பாக்கியாவிற்கு உண்மை எல்லாம் தெரிந்துவிட்டது. மேலும் கோபிக்கு விபத்து ஏற்பட்டு இருப்பதால் ராதிகாவும் மனம் இறங்கி இருக்கிறார். அதனால் இனி வரும் எபிசோடுகளில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. கோபியின் குடும்பத்திற்கும் தற்போது சந்தேகம் இருக்கும் நிலையில் கோபி பெரிய முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.
தமிழகத்தில் ஜூன் 8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா உண்மை எல்லாம் தெரிந்து மனம் உடைந்து போய் வீட்டிற்கு வருகிறார். அதனால் எழிலிற்கு அதை பார்த்து சந்தேகம் வருகிறது. பாக்கியா இந்த முறை உண்மை எல்லாத்தையும் குடும்பத்திடம் சொல்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால் இதுவரை அப்பாவியாக காட்டப்பட்ட பாக்கியா கதாபாத்திரம் இனி கோவமாக காட்டப்பட இருக்கிறது. கோபியை அவர் மன்னிக்கமாட்டார் என்பது உறுதியாக தெரிகிறது.
Exams Daily Mobile App Download
கோபியின் பொய்கள் எல்லாம் இனி பாக்கியாவிடம் செல்லாது என்பதால் அடுத்து பாக்கியாவின் ஆட்டம் ஆரம்பம் ஆக இருக்கிறது. ஆனால் கோபியின் குடும்பம் பாக்கியாவிற்கு தான் ஆதரவாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வந்த கோபி பாக்கியாவிடம் மீண்டும் பொய் சொல்ல அடுத்து வரும் எபிசோடுகளில் பாக்கியா அவர் சொல்லும் பொய்கள் தாங்கி கொள்ளாமல் அவரை கன்னத்தில் அறைந்துவிடுகிறார். அதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இனி பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.