பாக்கியாவை வீட்டை விட்டு அடித்து விரட்டும் கோபி – சீரியலில் புதிய திருப்பம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
குடிபோதையில் என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியாவும் கோபியும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் கோபி காட்டிவிடுகிறார். பின்பு போதை தெளிந்ததும் பாக்கியாவிடம் சென்று உன்னால்தான் இவ்வளவு பிரச்சனை என கூறி வீட்டைவிட்டு விரட்டும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் ராதிகாவிற்கு தெரிந்துவிட்டது. இதற்குப் பிறகும் ஏதேனும் பொய் சொல்லி கோபி தப்பிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது மூர்த்தி கோபியை பற்றி கூறியதிலிருந்து கோபி மீது ராதிகாவிற்கு சந்தேகம் வருகிறது. கோபி வீட்டிற்கு வரும் போதெல்லாம் என்னை உங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் அல்லது உங்களது குடும்பத்தில் உள்ள யாராவது புகைப்படத்தை எனக்கு காட்டுங்கள் என ராதிகா கேட்டபடி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால், கோபி காட்ட முடியாது என அழுத்தமாகக் கூறி விடுகிறார். ராதிகாவிடம் இருந்து தப்பிக்கவும் முடியாமல் உண்மையை கூறினால் ராதிகா தன்னை விட்டு விலகி விடுவார் என பயந்து கோபி குழப்பத்தில் நன்றாக குடித்து விடுகிறார். அப்போதும் விடாமல் என்னை இப்பொழுது உங்கள் வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள் அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை காட்டுங்கள் என கேட்கிறார். உடனே, கோபியும் பாக்கியாவும் சேர்ந்து இருக்கும்படியான புகைப்படத்தை எடுத்துக் காட்டுகிறார். அந்த புகைப்படத்தை பார்த்ததும் நீங்களும் என்னை ஏமாற்றி விட்டீர்களா என கூறி கதறி அழுகிறார்.
மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிமுகமாகும் புதுமுகம் – வில்லியாக இருக்குமோ?
பின்பு கோபி குடி போதையில் இருந்து தெளிவாகி என்ன நடந்தது என்பதை உணருகிறார். உடனே வீட்டிற்கு கோபமாக சென்று பாக்கியாவிடம் உன்னால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனை. உன்னை திருமணம் செய்யாவிட்டால் நான் நிம்மதியாக இருந்திருப்பேன் எனக்கூறி சண்டை போடுகிறார். இதுமட்டுமல்லாமல் பாக்கியாவை வீட்டைவிட்டு வெளியே துரத்தும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.