ராமமூர்த்தியை அவமானப்படுத்தும் கோபி.. போலீஸ் உடன் வந்த ஈஸ்வரி.. நடக்குமா திருமணம்?
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா திருமணத்தை நிறுத்த ராமமூர்த்தி பல முயற்சிகளை செய்ய ஆனால், அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்து பிரச்சனை வருவதால் ராதிகா திருமணம் வேண்டாம் என சொல்கிறார். இது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ:
பாக்கியலட்சுமி சீரியல் பல சுவாரசியமான காட்சிகளுடன் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. கோபி ராதிகாவின் திருமணம் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் பாக்கியா மனதை கல்லாக்கி கொண்டு சமையல் வேலைகளை பார்க்கிறார். இதற்கிடையே ராமமூர்த்தி எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என நினைத்து மண்டபத்தை தேடி அலைகிறார். அவர் கஷ்டப்பட்டு மண்டபத்தை கண்டுபிடிக்க, கோபியிடம் உனக்கு வெட்கமாக இல்லையா என கேட்கிறார்.
இல்லை என கோபி சொல்ல, ராமமூர்த்தி வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு இந்த வயதில் இது தேவையா என கேட்கிறார். அவர் பேசுவது பிடிக்காமல் கோபி ராமமூர்த்தியை வெளியே போக சொல்கிறார். அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் கோபி ராதிகா திருமணத்தை நிறுத்த முடியவில்லை. அதனால் அவர் மன வருத்தத்துடன் வீட்டிற்கு சென்று ஈஸ்வரியிடம் விவரத்தை சொல்கிறார். மறுபக்கம் இப்படி அடிக்கடி சண்டை போட ஆட்கள் வந்து கொண்டே இருப்பதால் ராதிகா எனக்கு திருமணம் வேண்டாம் என சொல்கிறார்.
அட கடவுளே.. இது என்ன கொடுமை.. கோபியை மணமுடித்து நெற்றியில் குங்குமத்துடன் ராதிகா வெளியிட்ட பதிவு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கோபி ராதிகாவிடம் கெஞ்சி இனிமேல் கண்டிப்பாக எந்த பிரச்சனையும் வராது என சொல்கிறார். அதனால் ராதிகா திருமணத்திற்கு சம்மதிக்கிறார். காலையில் திருமணத்திற்கு கோபியும், ராதிகாவும் கிளம்பிக் கொண்டிருக்க, ராமமூர்த்தியை கோபி அவமானப்படுத்தி அனுப்பிய கோவத்தில் ஈஸ்வரி போலீஸ் உடன் வருகிறார். அதனால் என்ன செய்வது என தெரியாமல் கோபி பதட்டத்தில் இருக்கிறார். அதனால் கோபி ராதிகா திருமணம் நடக்குமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாக இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்