விபத்தில் சிக்கிய கோபி, மருத்துவமனைக்கு வந்த ராதிகா & பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராஜேஷ் கோபி வீட்டில் ஈஸ்வரி, இனியா, ஜெனியிடம் எல்லா உண்மையையும் சொல்லிவிட ஈஸ்வரி கோபியிடம் உண்மையை கேட்க உடனே வீட்டிற்கு வர சொல்கிறார். அதனால் கோபி பதட்டமாக கார் ஓட்டி வர அவருக்கு விபத்து ஏற்படுகிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், கோபி மற்றும் ராதிகா இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக எழுதி கொடுத்ததால் ராஜேஷ் கோவமாக இருக்கிறார். அதனால் கோபியிடம் தனியாக பேச கோபி அவரை திட்டி அனுப்பிவிடுகிறார். அதனால் கோவப்பட்ட ராஜேஷ் கோபி வீட்டிற்கு வந்து ஈஸ்வரியிடம் கோபிக்கும் தன் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு ஈஸ்வரியால் நம்ப முடியாமல் இருக்க ராமமூர்த்தி உண்மையை சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனாலும் ஈஸ்வரியால் இதனை நம்ப முடியாமல் இருக்க கோபிக்கு போன் செய்து உடனே வீட்டிற்கு வர சொல்கிறார். எவனோ ஒருவன் வந்து உன்னை பற்றி தவறாக சொல்வதாக சொல்ல, கோபி என்ன விஷயம் என கேட்கிறார். ஆனால் ஈஸ்வரி உடனே நீ வீட்டிற்கு வா என சொல்லி போனை வைக்கிறார். மறுபக்கம் கோபி ராதிகாவிடம் மும்பைக்கு போக வேண்டாம் என கெஞ்ச ஆனால் ராதிகா முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். அதை நினைத்தும் கோபிக்கு பதட்டமாக இருக்கிறது.
PPF, NSC சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் மாற்றம்? மத்திய அரசு விளக்கம்!
அந்த பதட்டத்தில் கார் ஓட்டிக் கொண்டு வர ஒரு லாரி குறுக்கே வந்து கோபிக்கு விபத்து ஏற்படுகிறது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க நர்ஸ் கோபியின் மனைவி என பாக்கியாவிற்கு போன் செய்கிறார். அது தெரியாமல் இன்னொரு நர்ஸ் கோபியின் செல்போனை எடுத்து ராதிகாவுக்கு விவரத்தை சொல்கிறார். எனவே ராதிகாவும் பாக்கியாவும் மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது இருவரும் கோபியை பார்க்க பாக்கியா, ராதிகாவிடம் நீங்க எப்படி இங்கே வந்தீங்க என சந்தேகத்துடன் கேள்வி கேட்க இருக்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.