ராதிகாவிடம் காட்டுவதற்காக ஒரு குடும்பத்தை ஏற்பாடு செய்துள்ள கோபி – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ ரிலீஸ்!
மூர்த்தி கூறியதை கேட்டதும் ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் வருகிறது. உங்களது குடும்பத்தை காட்டுங்கள் என ராதிகா கோபியிடம் கேட்டதும் போலியாக ஒரு குடும்பத்தை கோபி ஏற்பாடு செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது தான் ராதிகாவிடமும், பாக்கியாவிடமும் மாட்டி நடுத்தெருவில் நிற்க போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழா முடிந்ததுமே கோபி ராதிகாவை சந்தித்து பேசுகிறார். ராதிகாவுடன் கோபி பேசுவதை பார்த்து மூர்த்திக்கு சந்தேகம் வருகிறது. உடனே மூர்த்தியும் தனமும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கின்றனர். உங்களது வருங்கால கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என மூர்த்தி கேட்கிறார். மொபைலில் உள்ள கோபியின் புகைப்படத்தை எடுத்து மூர்த்தியிடம் நீட்டுகிறார்.
Exams Daily Mobile App Download
மொபைலில் கோபியின் புகைப்படம் இருப்பதை பார்த்து மூர்த்தியும், தனமும் ஷாக் ஆகுகின்றனர். பின்பு, ராதிகாவிடம் நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறவர் உங்களையும் அவர் குடும்பத்தையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார். இது வரை அவரது குடும்பத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என கேட்கிறார். ராதிகாவிற்கும் மூர்த்தி சொல்வது சரி என்று படுகிறது. நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறவரின் குடும்பத்தை பார்த்து விட்டு அவரை திருமணம் செய்யலாமா என முடிவெடுங்கள் என கூறுகிறார்.
கண் முழித்ததும் குழந்தை கூறியதை கேட்டு ஷாக்கான பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
கோபி வீட்டிற்கு வந்ததுமே கோபியிடம் ராதிகா உங்கள் குடும்பத்தின் புகைப்படத்தை காட்டுங்கள் என கேட்கிறார். கோபி காட்ட முடியாது என கோவமாக கூறி விடுகிறார். அப்படினா வீட்டை விட்டு கிளம்புங்கள் என கூறுகிறார். கோபியும் வீட்டை விட்டு கிளம்புகிறார். ராதிகாவிடம் இப்படி மாட்டிக் கொண்டோமே என்ன செய்வது என கோபி பிளான் போடுகிறார். பின்பு, ராதிகாவிடம் அறிமுகப்படுத்துவதற்காகவே போலியாக ஒரு குடும்பத்தை ஏற்பாடு செய்கிறார். ராதிகாவிடம் என் வீட்டிற்கே உன்னை கூட்டி செல்கிறேன். என்னை போய் இப்படி சந்தேகப்படுகிறாய் என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.