ராதிகாவின் கைக்காசை மட்டுமே நம்பி இருப்பதால் கோபியை கண்டபடி திட்டிய ராதிகா – பாக்கியாவின் அருமையை உணரும் கோபி!

0
ராதிகாவின் கைக்காசை மட்டுமே நம்பி இருப்பதால் கோபியை கண்டபடி திட்டிய ராதிகா - பாக்கியாவின் அருமையை உணரும் கோபி!
ராதிகாவின் கைக்காசை மட்டுமே நம்பி இருப்பதால் கோபியை கண்டபடி திட்டிய ராதிகா - பாக்கியாவின் அருமையை உணரும் கோபி!
ராதிகாவின் கைக்காசை மட்டுமே நம்பி இருப்பதால் கோபியை கண்டபடி திட்டிய ராதிகா – பாக்கியாவின் அருமையை உணரும் கோபி!

கோபி அவரது பிசினஸ்ஸில் அடிக்கடி இழப்பு ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால் அதை சரிப்படுத்த ராதிகாவிடம் தான் காசு கேட்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் கோபியை ராதிகா கண்டபடி திட்டும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னையே நம்பி இருக்கும் பாக்கியாவை கைவிட்டு விட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்வாரா அல்லது பாக்கியாவின் அருமையை புரிந்து கொண்டு கோபி மனசு மாறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். எப்போதுமே வீட்டில் வேலை வேலை என சொல்லிவிட்டு ராதிகா வீட்டிற்கே கோபி சென்று விடுகிறார். வீட்டிற்கு தெரியாமல் ராதிகாவை எப்படி சந்திப்பது என சூழ்ச்சி செய்ய மட்டும் தான் கோபிக்கு தற்போதெல்லாம் நேரம் இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

பாக்கியா கண்ணுக்கு முன்னாடி தவறு செய்தும் கூட பாக்கியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற விஷயம் ஏற்கனவே கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும். ஆனால், பாக்கியாவிற்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்துவிட்டால் பாக்கியா தாங்கிக் கொள்ள மாட்டார் என பயந்து ராமமூர்த்தி கோபியை கண்டித்துமட்டும் விட்டுவிடுகிறார். ஆனாலும் கோபியின் ஆட்டம் அடங்குவதாக தெரியவில்லை. முழுக்க முழுக்க ராதிகாவுடன் தான் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தமிழகத்தில் வழக்கு விசாரணை இரவில் நடத்த கூடாது – டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் அதிரடி உத்தரவு!

ராதிகாவும் கோபிக்கு இதுவரை நிறைய செலவு செய்திருக்கிறார். கோபிக்கு பிசினஸ்ஸில் இழப்பு ஏற்படும்போதெல்லாம் ராதிகா தான் அந்த முழு தொகையையும் செலுத்திருக்கிறார். ஒரு தடவை இதே மாதிரி பணம் கேட்டால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் ராதிகாவின் கைக்காசை மட்டுமே நம்பி பாக்கியா இருப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் ராதிகாவிற்கே வெறுப்பு வருகிறது. உடனே, வேறு ஏதாவது வேலைக்காவது ட்ரை பண்ணுங்க என கண்டபடி பேசுகிறார். உடனே, இதுவே பாக்கியாவாக இருந்தால் என்னை உக்கார வைத்து பார்த்து கொள்வாள் என நினைக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!