வெளியே வரும் ராதிகாவின் சுயரூபம்.. பாக்கியாவின் அருமையை உணரும் கோபி – அடுத்தகட்ட கதைக்களம்!
இல்லத்தரசிகளின் கதையான பாக்கியலட்சுமி சீரியலில், கோபி குடும்பமே சேர்ந்து, ராதிகா கழுத்தில் கோபி தாலி கட்ட கூடாது என நினைத்தும் கூட, கோபி ராதிகாவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இனி வரும் எபிசோடுகளில் ராதிகாவின் சுயரூபம் கோபிக்கு தெரிய வர, பாக்கியாவின் அருமை கோபிக்கு புரிய இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் கதை முதலில் நடுத்தரப் பெண் பாக்கியாவின் வாழ்க்கையை பற்றியே காட்டப்பட்ட நிலையில், அதன் பின் கோபி ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என நினைத்து பல மோசடிகளை செய்கிறார். பல எபிசோடுகளை கடந்து தற்போது கோபி ராதிகாவின் உறவு கல்யாணம் வரை வந்துள்ளது. கோபியின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஆனாலும் கோபி ராதிகாவின் கல்யாணம் நடந்து முடிகிறது.
அதனால் ஈஸ்வரி, இனியா, ராமமூர்த்தி என அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். இனி நீ எனக்கு மகனே இல்லை என ஈஸ்வரி கோபியை பேசிவிட அதனால் கோபியும் வருத்தமாக தான் இருக்கிறார். கோபி தன்னுடைய முழு பாசத்தையும் இனியா மீது வைக்க, ஆனால் ராதிகாவும் மயூவும் இனியாவிடம் பேசவிடாமல் கோபியை தடுக்கின்றனர். இனி வரும் எபிசோடுகளில் ராதிகாவின் சுயரூபம் வெளியே வர இருக்கிறது. ராதிகா வீட்டில் கோபிக்கு சாப்பாட்டிற்கே சிரமம் ஏற்பட இருக்கிறது.
சீரியலில் களமிறங்கும் மற்றொரு சன் டிவி தொகுப்பாளர்.. அதுவும் இவருடைய சீரியலா? ரசிகர்கள் உற்சாகம்!
Exams Daily Mobile App Download
மேலும் பாக்கியா துணி துவைத்து, அயன் செய்து வைப்பது போல ராதிகா செய்யாமல் இருக்கிறார். மேலும் கோபி கோவமாக பேசினால் பாக்கியா போல ராதிகா கேட்டுக் கொண்டு இருக்கமாட்டார். அதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வர இருக்கிறது. அதன் காரணமாக கோபிக்கு பாக்கியா தான் சிறந்த மனைவி என உணரும் தருணம் வர இருக்கிறது. இனி வரும் எபிசோடுகளில் கோபியின் பாடு திண்டாட்டமாக இருப்பது தான் கதையாக இருக்க போகிறது என்பதில் சந்தேகமில்லை.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்