திருமணம் முடிந்த முதல் நாளே ராதிகாவிடம் சிக்கி திண்டாடும் கோபி – அல்லல்படும் காதல் மன்னன்!
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பல சுவாரசியமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அடுத்து நடக்கும் எபிசோடுகள் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது.
பாக்கியலட்சுமி:
பலரது எதிர்ப்பையும் மீறி கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்கிறார். தன் அப்பா, அம்மா, மகள் என குடும்பம் மொத்தமும் வந்து தடுத்தும் கோபி ராதிகா திருமணத்தை நிறுத்த முடியவில்லை. இதனால் ஈஸ்வரி நீ என் மகனே இல்லை என கோபியை தலைமுழுகி விடுகிறார். மறுபுறம் ராதிகாவை ஆசை ஆசையாக திருமணம் செய்யும் கோபியின் நிலைமை திண்டாட்டமாக இருக்கப்போகிறது.
பாக்கியா போன்று ராதிகா அப்பாவி இல்லை. கோபி என்ன திட்டினாலும் கேட்டுக்கொண்டு ராதிகா இருக்கமாட்டார். கோபி பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் குத்தம் கண்டுபிடிப்பது போல ராதிகா இனிவரும் எபிசோடுகளில் பேச தொடங்க உள்ளார்.
சபாஷ்.. வேற லெவலு.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 20 போட்டியாளர்கள் – ரணகளமா இருக்கும் போலயே!
Exams Daily Mobile App Download
மேலும் திருமண மண்டபத்தில் ஈஸ்வரி பேசியதற்கு கோபி ஏதும் சொல்லவில்லை என்ற கோவம் வேறு ராதிகாவிற்கு இருக்கிறது. இதனால் கோபி ராதிகாவிடம் சிக்கி பாடாய் பாடு படப்போகிறார். அப்பொழுது தான் பாக்கியாவின் அருமை கோபிக்கு தெரியும். இந்த எபிசோடுகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்