ராதிகாவிடம் வசமாக மாட்டிக் கொண்ட கோபி? பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதை என்ற ஒன்லைனில் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆரம்பத்தில் டி.ஆர்.பி ரேசில் மெதுவாக சென்று கொண்டிருந்த சீரியலின் வேகத்தை கோபி – ராதிகா ட்ராக் மின்னல் வேகத்தில் கொண்டு சென்றது. பாக்கியலட்சுமி சீரியலில் இன்னும் சில எபிசோடுகளில் கோபி வசமாக மாட்டிக் கொள்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அடுத்த ட்விஸ்ட்:
விஜய் டிவி-யில் பல ஹிட் சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. பிற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்கள் விஜய் டிவி-யில் அதிகம் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. இந்த சீரியலில் மனைவி பாக்யாவுக்கு தெரியாமல், தன்னுடைய முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் கோபி. கோபி தான் பாக்யாவின் கணவர் என்று ராதிகாவுக்கு தெரியாது. ராதிகாவின் காதலன் கோபி என்பது பாக்யாவுக்கு தெரியாது. இப்படியே, பல எபிசோடுகள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. கோபி எப்போது மாட்டுவார்? என்று பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
ExamsDaily Mobile App Download
இன்னிக்கு மாட்டிப்பார், நாளைக்கு மாட்டிப்பார் என மாறி மாறி ப்ரோமோக்களை வெளியிட்டு சீரியல் ரசிகர்களை குழப்பி வந்தார் சீரியல் இயக்குனர். கோபியின் அப்பாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்தும், அவருக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அவரால் வீட்டில் கோபியை பற்றி சொல்ல முடியவில்லை அதே நேரம் எழில் கோபியை வார்னிங் செய்து வந்தார். ஆனாலும் கோபி திருந்துவதாக தெரியவில்லை. சீரியலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் ரசிகர்களும் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் எபிசோடுகளில் பாக்கியா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இருப்பினும் எழில் பல முயற்சிகளை மேற்கொண்டு பாக்கியாவை காப்பாற்றி விட்டார். மேலும் கோபி இனிமேல் பாக்கியாவை சமையல் பிசினஸ் செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டார்.
பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் கோபி – நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!
இது ஒருபக்கம் இருக்க ராதிகா குற்ற உணர்ச்சியில் துடிக்கிறார், டீச்சர் தவறு செய்யல நம்ம தான் தப்பா நினைச்சுட்டோம் என வருத்தப்படுகிறார். இதனால் ராதிகா பாக்கியா விடம் மன்னிப்பு கேட்க டீச்சர் வீட்டுக்கு போக வேண்டும் என யோசிக்கிறார். ஆனால் இந்த விஷயம் கோபிக்கு தெரிந்தால் டீச்சர் வீட்டுக்கு போக விடமாட்டார் அவருக்கு தெரியாமல் போக வேண்டும் என மனதிற்குள் நினைக்கிறார். இதற்கிடையில் பாக்கியாவின், பிசினெஸ் கஸ்டமர்ஸ் பாக்கியாவிடம் உணவு வாங்க தயங்குகிறார்கள். இதற்கு எழில், ஆசிரமத்திற்கு கொடுத்த உணவின் டெஸ்ட் ரிப்போர்டை மீடியாவிற்கு கொடுத்து இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சி எடுக்கிறார். மேலும் ராதிகா பாக்கியா வீட்டிற்கு வந்தால், என்ன நடக்கும்? ராமமூர்த்தி தாத்தா கோபி-பாக்கியா போட்டோவை ராதிகாவிடம் கொடுத்து விடுவாரா? என பல எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.