மகனிடம் மன்னிப்பு கேட்கும் கோபி, தனித்து விடப்படும் பாக்கியா – சீரியலில் அடுத்த கட்ட கதைக்களம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரும் கதைக்களத்தில் கோபி தனது தவறை உணர்ந்து செழியனிடம் மன்னிப்பு கேட்கிறார். மறுபக்கத்தில் குடும்பத்தை பிரிந்து தனித்து விடப்படும் பாக்கியாவுக்காக ஜெனி, கோபியிடம் பரிந்து பேசுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நூற்றுக்கணக்கான சீரியல்களில் குடும்ப கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கு எப்போதுமே வரவேற்பு கொடுக்கப்படுவது உண்டு. அந்த வகையில் பாக்கியா என்ற ஒரு அப்பாவி குடும்பத் தலைவியின் வாழ்க்கையில் நடக்கும் ஏமாற்றம், அவமானம் போன்ற கதைக்கருவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களின் ஏகபோக ஆதரவை சம்பாதித்து வருகிறது. இது மட்டும் இல்லாமல், விதவை மறுமணம் உள்ளிட்ட சில முக்கியமான விஷயங்களும் இந்த சீரியலின் தரத்தை ரசிகர்கள் மத்தியில் உயர்த்தி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இதுவரை குடும்பத்திற்காக, பிள்ளைகளுக்காக, கணவருக்காக என்று யோசித்து ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்து இப்போது கணவரால் ஏமாற்றப்பட்டுள்ள பாக்கியா ஒரு முறை தனக்காக யோசித்து முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கிறார். இந்த முடிவால் யாருக்கு என்ன பாதிப்பு என்பதில் சிந்தனை கொள்ளாமல் பாக்கியா இனி தனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இப்போது பாக்கியா வீட்டை விட்டு போனதற்கு பிறகு கோபி தான் செய்த தவறுக்காக மனம் வருந்துகிறார். ஆனால் அவரது வருத்தம் இன்னும் ஒருதலை பட்சமாக தான் இருக்கிறது.
அதாவது, தனது குடும்பத்துக்காக எல்லா ஆசைகளை விட்டு பாக்கியாவை திருமணம் செய்ததாகவும், 25 வருடங்களுக்கு பிறகு தனக்காக யோசித்ததால் இதெல்லாம் நடந்தது என்றும் செழியனிடம் சொல்லி மன்னிப்பு கேட்கிறார். ஆனால், கடைசி வரை பாக்கியாவுக்கு துரோகம் செய்து விட்டோம் என்ற எண்ணம் கோபிக்கு துளிகூட இல்லை என்பது இதில் தெரிய வருகிறது. இதற்கு மேலேயும் பாக்கியா கோபியை மன்னித்து ஏற்றுக் கொள்வதில் எந்த அர்த்தமும் இருப்பது போல தெரியவில்லை. ஆனால், பாக்கியாவுக்காக கோபியிடம் பரிந்து பேசும் ஜெனி, இந்த குடும்பத்திற்காக மட்டும் தான் பாக்கியா அனைத்தையும் செய்ததாகவும், கோபி மீது அவருக்கு அன்பு இருந்ததாகவும் கூறுகிறார்.
போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து – திடீர் அறிவிப்பு!
இதை கேட்டாலும் கோபியின் மனம் மாறுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. மறுபக்கத்தில், கோபி பற்றிய உண்மைகள் தெரிந்தும் அதை சொல்லாமல் மறைத்ததற்காக பாக்கியாவின் கோபம் ராதிகா மீது திரும்புகிறது. இப்போது ராதிகா தன் பக்கம் இருக்கும் நியாயத்தை பாக்கியாவுக்கு புரிய வைப்பாரா, இல்லை என்றால் கோபி, பாக்கியாவை விட்டு பிரிந்ததால் அவரை திருமணம் செய்து கொள்வாரா என பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இது தொடர்பான கதைக்களம் அடுத்து வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.