கோபி, ராதிகா திருமணம் முடிந்தது: பாக்கியாவிடம் வரிந்து கட்டி சண்டைக்கு வந்த மொத்த குடும்பம்!
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தற்போது தான் மீண்டும் தனது தொழிலில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். ஆனால், தற்போது புது பிரச்சனை ஒன்று பாக்கியாவிற்கு வந்திருக்கிறது. இதனால் பாக்கியா மேலும் மனம் ஒடிந்து போகிறார்.
அதிர்ச்சியில் பாக்கியா:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு வெளியே சென்றதை வைத்து ராதிகா மனதில் “பாவம் கோபி” என்ற எண்ணத்தை வர வைக்கிறார் கோபி. ஆனால், ஈஸ்வரி, இனியா மற்றும் செழியன் மூவரும் கோபி செய்த காரியத்தை புரிந்து கொள்ளாமல் பாக்கியா மேல் தான் தவறு என்று குறை சொல்லி வருகின்றனர். இன்னொரு புறம் கோபி, ராதிகா உடன் திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.
ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் சந்துரு இருவரும் ராதிகாவின் திருமணத்தை பெரிய அளவில் செய்வது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றனர். அப்போது தான் அக்கம் பக்கத்தினர் ராதிகாவிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள் என்று பேசிக் கொள்கின்றனர். ராதிகா இதற்கு முதலில் சம்மதிக்காத போதும், இருவரும் பேசி ராதிகாவை சம்மதிக்க வைக்கின்றனர். ஆனால், கோபி வீட்டை விட்டு வெளியே வந்த இரண்டாவது வாரத்தில் இதை பற்றி கேட்கிறார்களே என்று கொஞ்சம் கூட யோசிக்காமல், திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.
Exams Daily Mobile App Download
இதன் பிறகு வரும் எபிசோடுகளில் ஒருவழியாக கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் முடிந்து விடுகிறது. அப்போதும் கூட கோபி செய்த அநியாயத்தை பற்றி யோசிக்காமல், ஈஸ்வரி, இனியா மற்றும் செழியன் மூவரும் கோபி திருமணம் செய்து கொண்டதற்கு நீதான் காரணம் என்று பாக்கியாவிடம் சண்டை போடுகின்றனர். கோபி விவாகரத்து கேட்டால், நீ கொடுத்து விடுவாயா? கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அனைத்திற்கும் பாக்கியா தான் காரணம் என்றும் சண்டை போடுகின்றனர். இதனால் பாக்கியா இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் வருத்தத்தில் ஆழ்கிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்