வேலைவாய்ப்பிற்கான கூகிளின் புதிய செயலி அறிமுகம் !!!!
இன்றைய சூழலில் வேலைவாய்ப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது. பல்வேறு பட்டதாரிகள், இளைஞர்கள் என அனைவரும் வேலைவாய்ப்பினை பெறுவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
அதிலும் இன்றைய ஊரடங்கு சூழலால் பலரும் தங்களின் வேலைகளை இழந்து உள்ளனர். வெளியே என்ஹகும் சென்று தேட இயலாததால் ஆன்லைனில் இணையதளத்தில் என பல வழிகளில் வேலைவாய்ப்பு பெற போராடி வருகின்றனர்.
ஏற்கனவே பல இணைய வேலைவாய்ப்பு ஆப்கள் மற்றும் நிறுவங்கள் செயலில் இருந்தாலும் அவற்றிற்கு போட்டியாக கூகிள் நிறுவனமும் தற்போது ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வேலை இல்லாதவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பினை பெற உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூகிளின் இந்த புதிய செயலுக்கு கோர்மோ ஜாப்ஸ் என்று பெயர். இதில் நம் சுயவிவர பட்டியலினை உருவாக்கிக் கொண்டால் அது சம்பந்தமான வேலைகளை தேட இயலும். மேலும் பல வேலைவாய்ய்ப்பு செய்திகளை பரிந்துரை செய்யும்.
இந்த செயலி ஆனது 2018 ல் வங்கதேசத்தில் மற்றும் 2019 ல் இந்தோனேசியாவில் என இரு நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்