வாரத்தில் 2 நாட்கள் வீட்டில் இருந்து வேலை, மூன்று நாட்கள் ஆபிஸ் – கூகிள் சுந்தர் பிச்சை மாஸ்டர் பிளான்!
உலக அளவில் பயன்படுத்தப்படுகின்ற கூகிள் நிறுவன ஊழியர்களுக்கு வாரத்தில் மூன்று நாள் மட்டும் அலுவலகம் வந்தால் போதும். என்ற புதிய ஹைப்ரிட் திட்டத்தை கூகிள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கூகிள் நிறுவனம்:
உலக அளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுவது தான் கூகிள் தேடுதல் ஆகும். இந்த நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை ஆவார். கடந்த ஆண்டு முதல் கொரோனாவின் தாக்கம் இருந்து வருவதால் அனைவரும் வீட்டிலிருந்தே தான் வேலை பார்த்து வருகின்றனர். ஒரு சில சிறிய அளவிலான கம்பெனிகள் மட்டும் திறக்கப்பட்டு பணியாளர்களை அலுவலகத்திற்கு வர அனுமதித்துள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அலுவலகங்களை திறக்கலாமா என யோசித்து வருகின்றனர். அனைவரும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிலிருந்தே வேலை செய்து பழகிவிட்டனர். அவர்களுக்கு மறுபடியும் அலுவலகம் வந்து வேலை பார்ப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். அந்தவகையில் பல்வேறு நிறுவனங்களும் குழம்பியுள்ளன. இந்நிலையில் இதற்கு தீர்வு அளிக்கும் விதமாக ஹைபிரிட் ஒர்க்கிங் திட்டம் என்பதை கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் அறிவித்துள்ளார்.
நவம்பர் 21 வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
இந்த ஹைபிரிட் திட்டத்தின்படி வாரத்தில் பாதி நாட்கள் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யலாம் மற்றும் மீதி நாட்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம். இந்த திட்டத்தை கூகிள் நிறுவனம் கடந்த 2020 ம் ஆண்டு அமல்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின்படி வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும். மீதி நாட்கள் ஊழியர்கள் அவர்களுக்கு பிடித்த இடத்தில் இருந்து கொண்டு வேலையை பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இத்திட்டத்தின் மூலம் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வரும்போது சக பணியாளர்களுடன் சேர்ந்து ஒத்துழைத்து பணியாற்றுவதால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை நிகழும். பின்னர் 2 நாட்கள் அவர்கள் விரும்பிய இடத்தில் இருந்து வேலை பார்க்கும் போது அலுவலகத்திற்கு சென்று வரும் செலவுகள் குறையும் என்று அவர் திட்டத்தை விளக்கியுள்ளார்.
தீவிரமெடுக்கும் கொரோனா, பள்ளிகளை மூட அதிரடி உத்தரவு – சீனா நடவடிக்கை!
இந்த ஹைபிரிட் வொர்கிங் திட்டம் பற்றி விவரங்களை பிச்சை அவர்கள் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எடிட்டரிடம் பகிர்ந்துள்ளார். இந்த மூன்று நாட்கள் அலுவலகம் மற்றும் எனது நாட்கள் வீடு அல்லது ஊழியர்கள் விரும்பும் இடத்திலிருந்து பணியாற்றுவது என்பது நிறுவனத்தின் நிரந்தரமான மாற்றமாக இருக்குமா என்ற கேள்விக்கு, “ஆம் இருக்கலாம்” என்று அவர் பதிலளித்துள்ளார். அதனை தொடர்ந்து கூகிள் நிறுவனத்தின் CEO சுந்தர்பிச்சை ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும்போது கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தான் வரவேண்டும் என்று அந்நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.