சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை – அட்சய திருதியில் மக்களுக்கு நல்ல செய்தி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தொழில் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். மேலும் முதலீடு அதிகரித்ததன் விளைவாக தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. இந்தியாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கத்தின் இறக்குமதியும் வெகுவாக குறைந்து, இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு பெரும் காரணமாக அமைந்தது.
TN Job “FB Group” Join Now
அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளித்த பிறகு தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது அதனை தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணத்தால் உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தது. இதன் விளைவால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 1000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை ஓரளவு குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ரூ.38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கண்ணம்மாவை பழி வாங்க வெண்பாவை திருமணம் செய்துகொண்ட பாரதி – சீரியலில் புதிய திருப்பம்!
இன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலும் இந்த அட்சய திருதி நன்னாளில் பெண்கள், நகைப்பிரியர்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பார்கள். இன்றைய நாளில் தங்க நகைகள் வாங்கினால் மென்மேலும் சேரும் என்பது நம்பிக்கை. இன்றைய நிலவரப்படி ஒரு கிராமுக்கு தங்கம் ரூ.25 குறைந்து ரூ.4,816-க்கு விற்பனையாகிறது. மேலும் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.67.60-க்கு விற்கப்படுகிறது.