தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பதிவு செய்யும் முறையில் மாற்றம்!
தமிழகத்தில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் அட்டை தாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனையில் உள்ளதாக உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பயோ மெட்ரிக் முறைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் முக்கிய ரயில்கள் ரத்து – காரணம் இது தான்! பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் முறையினால் பொருட்கள் வாங்குவதில் ரேஷன் அட்டைதாரர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கைவிரல் ரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறையில் மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதில் சில நேரம் கைரேகை பதிவாவதில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது. இவ்வாறு கைரேகை பதிவாகாத நேரங்களில் உரிய ஏடுகளில் பதிவு செய்து விட்டு பொருட்களை வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற குறைகளை கலைப்பதற்கு நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது 98.23 சதவீத விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக இத்திட்டம் நகரப் பகுதிகளில், ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தற்போது சோதனையில் உள்ளது. இதன் மூலம் பயோ மெட்ரிக் முறைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.