தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – கல்வித்துறை அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மேலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் அதிகரிக்கும் போது ஆன்லைன் வகுப்புகள் படிப்படியாக குறைந்து விடும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
சூப்பர் அறிவிப்பு:
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த 5ம் தேதி முதல் ஆண்டு இறுதித் தேர்வுகள் தொடங்கி மே 13 உடன் நிறைவடைந்தது. இதை அடுத்து மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும், உங்களை பாதுகாக்க தமிழக அரசு உள்ளது. அதை மையப்படுத்தி தான், “நான் முதல்வன்” திட்டமெல்லாம் உருவாக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
தொடர்ந்து பேசிய அவர், பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு மற்றொரு குழந்தையை ஒப்பிட வேண்டாம், ஏனென்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி திறமை இருக்கும் என மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். மேலும் கோடை விடுமுறை தொடங்கி விட்டது என மாணவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் அதிகமாக சுற்றக்கூடாது, நீர் நிலைகள் இருக்கும் பகுதிக்கு செல்ல கூடாது என அறிவுறுத்தினார். மாணவர்கள் கோடை விடுமுறையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள கணினி வகுப்பு, நீச்சல், ஆர்ட் உள்ளிட்டவற்றுக்கு சென்று விடுமுறையை நல்ல வகையில் பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும்.
Developer ஆக ஆசையா? ACCENTURE நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!
மேலும் நீட் விலக்கிற்காக சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறுவோம் என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார். மேலும் கடந்த 2 வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது, இருப்பினும் தற்போது தான் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் படிப்படியாக குறைக்கப்படும். அதன்படி நேரடி வகுப்புகள் சிறப்பாக நடைபெறும், எனவே 2022-2023 கல்வியாண்டில் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்றார்.