தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி – ரயில்வே துறை அறிவிப்பு!

0
தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி - ரயில்வே துறை அறிவிப்பு!
தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி - ரயில்வே துறை அறிவிப்பு!
தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி – ரயில்வே துறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஒரு நற்செய்தியை அறிவித்து உள்ளது இந்திய ரயில்வே துறை. மேலும் இது தென்மாவட்ட பயணிகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த அறிவிப்பு என்றும் கூறலாம். மேலும் இந்த தொகுப்பில் இந்த அறிவிப்பு என்ன என்பதை முழுமையாக பார்ப்போம்.

ரயில்வேத்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவி இருந்த காரணத்தால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக உள்ள தொழில்நுட்பங்கள் நிறுத்தப்பட்டது. அதில் முக்கிய ஒன்றாக ரயில்வே துறை இருந்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் ரயில் பயணம் இல்லாமல் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்ததால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து வழி போக்குவரத்துகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அந்த வகையில் கோடை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பு என்னவென்றால், கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் மற்றும் தென்காசி வழியாக திருநெல்வேலி-தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர கோடை விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

தமிழக சமூக நலத்துறையில் முக்கிய வேலை வாய்ப்பு – மாதம் பிறந்தால் ரூ.15,000 ஊதியம்..!

அதன்படி தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (06005), ஏப்ரல் 22ம் தேதி முதல் ஜூன் 24 ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-தாம்பரம் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (06006) ஏப்ரல் 24ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு கிளம்பி மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அடுத்தாக, தென்காசி வழியாக திருநெல்வேலி- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06004) ஏப்ரல் 17ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் தாம்பரம்-திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06003) ஏப்ரல் 18ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 10.35 மணிக்கு திருநெல்வேலியில் வந்தடையும் என்றும் கூறியுள்ளனர். இதனால் ரயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!