ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மேலும் நீடிக்கப்பட்ட இலவச திட்டம்!
மத்திய அரசு கொரோனா கால பொருளாதார பற்றாக்குறையை ஏழை, எளிய மக்கள் சமாளிக்கும் விதமாக வழங்கி வரும் இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் அளிக்கும் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்துள்ளது.
இலவச ரேஷன் திட்டம்:
கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக மக்கள் தங்கள் அன்றாட உணவிற்கு கூட போராடும் நிலை ஏற்பட்டது. இதனால் மத்திய அரசு, அனைத்து மாநில மக்களும் பயனடையும் வகையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம், பிரதமரால் துவக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு நலத்திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தினால் பயனடையும் அனைத்துப் பயனாளிகளுக்கும் நபருக்கு ஐந்து கிலோ வீதம் கூடுதல் உணவு தானியம் வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்கள் கோதுமை மற்றும் அரிசியை மாதம் இருமுறை இலவசமாகப் பெறுவார்கள். இதனுடன், பருப்பு, சமையல் எண்ணெய், உப்பு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் பல கோடி கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். கொரோனா கால ஊரடங்கில் மக்கள் நலனிற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம் இதுவரை பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்களே உஷார்… தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை – வானிலை மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், கடந்த முறை மத்திய அமைச்சகம் அறிவித்த போது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்ததன் காரணமாக கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும், 3 மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்