ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – டிசம்பர் வரை இனி இது இலவசம்!
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:
2020 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக பரவிய கொரோனா பாதிப்பால் பல்வேறு கட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ரூ.3,280 கோடியில் சிறப்பு நிவாரண திட்டத்தை அமல்படுத்தியது.
இந்த திட்டத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகையுடன் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிவாரண திட்டம் பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.அதே போல் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமும் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நேற்றுடன் முடிவடைய இருந்தது.
வேறு லெவலுக்கு மாறப்போகும் இந்தியா.. நாட்டின் முக்கிய திருப்பம் .. 5ஜி சேவைகள் இன்று அறிமுகம்!
Exams Daily Mobile App Download
அதை தொடர்ந்து கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மூன்று மாதங்களுக்கு அதாவது டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் வழக்கம் போல் இந்த இலவச அரிசியை டிசம்பர் மாதம் வரை வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்