தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு குட் நியூஸ் – ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழக கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 110 விதி கீழ் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அரசாணைபடி, புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்ததில் அதிமுக ஆட்சியின்போது நகைக் கடன்கள் வழங்கப்பட்டதில் பல்வேறு விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனால் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நகைக்கடன் வாங்கியிருப்பது, முன்னதாக பயிர்க்கடன் பெற்றவர்கள், வெவ்வேறு வங்கிகளில் 5 சவரனுக்கும் மேல் நகைக்கடன் பெற்றவர்கள் உள்ளிட்டோர், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. நகைக்கடன் தள்ளுபடி, அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சேகரிக்க சிறப்பு தணிக்கை நடைபெற்றது. இந்த சிறப்பு தணிக்கையானது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுறவு சங்ககளிலும் அயல் மாவட்ட தணிக்கையாளர்கள் மூலம் நடைபெற்றது.
சென்ட்ரல் ரெயில்சைட் கிடங்கு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ஊதியம் ரூ.80,000/-..!
இதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அடகு வைத்த நகைகளும், தள்ளுபடி சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் நாகை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் – 59, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்-2, வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்- 1, வேதாரண்யம் வேளாண் உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்-1, வேதாரண்யம் ஊரக வளர்ச்சி வங்கி -1, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் – 9 என மாவட்டத்தில் உள்ள மொத்த 73 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்ற 18,412 நபர்களுக்கு கடன் தொகை ரூ.5371.27 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.