அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – இந்த மாநிலங்களில் DA உயர்வு அறிவிப்பு!
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவுகளைக் கையாள அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசுகள், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்களின் மத்தியில் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DA உயர்வு:
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய அகவிலைப்படி (DA) மற்றும் Dearness Relief (DR) உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சில மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்கள் இந்த மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்பள உயர்வை பெற்றுள்ளனர். அதாவது மகாராஷ்டிராவிலிருந்து தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் இருந்து குஜராத் வரை, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் இந்த மாதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது, அதைத் தொடர்ந்து ஊதிய உயர்வு ஏற்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு , ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்படும். அதாவது 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது.
இதன்மூலம் 31%ல் இருந்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34%ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். மேலும் இந்த மாதத்தில் 4 அல்லது 5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா அரசு 3% டிஏ உயர்வு:
மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) இந்த மாதம் 3% உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தின் சதவீதமாக 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் அரசு 6% DA உயர்வு:
- ஜூலை 4 ஆம் தேதி, சத்தீஸ்கர் அரசு 6% அகவிலைப்படியை (DA) அறிவித்தது, இது மாநில அரசு ஊழியர்களுக்கு 28% ஆக உள்ளது. முதலமைச்சரின் கூற்றுப்படி, மிக சமீபத்திய உயர்வு, குறைந்தது 3.8 லட்சம் மாநில அரசு ஊழியர்களுக்கு உதவும்.
- முதல்வர் அலுவலகம் (CMO) படி, இந்த ஆண்டு மே மாதம் முதல், மாநில அரசு ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் கீழ் 22% மற்றும் 6வது ஊதியக் குழுவின் கீழ் 174% DA பெற்று வருகின்றனர். உத்தரவின்படி, அடுத்தடுத்த திருத்தங்களின் விளைவாக 7 வது மற்றும் 6வது ஊதியக் குழுக்கள் முறையே 6% மற்றும் 15% அதிகரித்துள்ளது.
- இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல், மாநில அரசு ஊழியர்களுக்கு 28% மற்றும் 189% DA வழங்கப்படும். ஆனால், இந்த உயர்வால் ஆண்டுக்கு ரூ.2,160 கோடி கூடுதல் செலவாகும்.
குஜராத் அரசு 3% DA உயர்வு:
ஆகஸ்ட் 15 அன்று, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி அறிவித்தார். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 9.38 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் லாபம் அடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்