மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து வீடு கட்டும் கடனுக்கான வட்டி விகிதத்தை தற்போது குறைத்துள்ளது. மேலும் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
வட்டி விகிதம் குறைப்பு
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது. அத்துடன் கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதை கடந்த ஆண்டு வழங்கியது. அதன்படி 11% அகவிலைப்படியை பெற்று 28% அகவிலைப்படியை பெற்றனர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு பெற்று 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
வங்கி துறையில் 72 காலிப்பணியிடங்கள் – ரூ.1,50,000/- ஊதியம்..! உடனே விண்ணப்பியுங்கள்!
இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அகவிலைப்படியை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனை இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தியுள்ளது. மேலும் இதனை மாதந்தோறும் வழங்கும் சம்பளத்தில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க ஏப்ரல் 21ம் தேதி கடைசி நாள்!
மேலும் இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வங்கிகளில் கடன் வழங்கப்படும். இதற்கு 7.9 சதவீதத்தில் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதன்படி வீடுகளை கட்டிக்கொள்ள வங்கிகளில் இருந்து எடுக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.8% குறைத்து தற்போது 7.1% வட்டி விகிதமாக மாற்றியுள்ளது. இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.