தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ் – விரைவில் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் அது குறித்து முதல்வர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று மாலை நடைப்பெற்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குடும்பத்தலைவிகளுக்கு உதவித்தொகை:
தமிழக தேர்தலில் போது திமுக ஆட்சிக்கு வந்தால் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. அதன் படி பெரும்பான்மையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்ற வாக்குறுதி மற்றும் நிலுவையில் இருக்கிறது. அதை உடனே நிறைவேற்ற வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முதல்வர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய பின்பு, உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது.
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் விளக்கம்!
அதன் படி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 18ம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அடுத்த நாளே வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அதில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியாக பொதுமக்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.