மத்திய அரசு ஊழியர்களுக்கு மே 31ம் தேதி முக்கிய அறிவிப்பு – விரைவில் அகவிலைப்படி (DA) 4% உயர்வு!

0

மத்திய அரசு ஊழியர்களுக்கு மே 31ம் தேதி முக்கிய அறிவிப்பு – விரைவில் அகவிலைப்படி (DA) 4% உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்த்தப்பட்ட பிறகு, இப்போது மீண்டும் 2022 ஜூலை மாதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மே 31ம் தேதி புதிய அப்டேட் வரவுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

DA 4% உயர்வு:

7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்யப்படுகிறது. இது ஆண்டின் முதல் முறையாக ஜனவரியில் அதிகரிக்கும்.அதன் பிறகு ஜூலையில் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை அகவிலைப்படி தொகை 34 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், அகவிலைப்படி கூடுதலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, இது குறித்த முக்கிய அறிவிப்பு வரும் மே 31ம் தேதி அன்று வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது.

TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – இன்று வெளியாகும் உத்தேச விடைகள்!

அதாவது, மே 31, 2022 அன்று, அடுத்த தவணைக்கான அகவிலைப்படி தொகை எவ்வளவு அதிகரிக்கும் என்று மீண்டும் ஒருமுறை மதிப்பிடப்படும். அந்த வகையில் மே 31ல் ஏஐசிபிஐ குறியீட்டின் புதிய எண்கள் வரவுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது வரை 34% அகவிலைப்படி (DA) வழங்கப்படுகிறது. ஆனால், அடுத்த அகவிலைப்படியில் கூடுதல் திருத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக ஜனவரி மற்றும் பிப்ரவரி யில் ஏஐசிபிஐ குறியீட்டில் சிறிது சரிவு ஏற்பட்டு 125.1 ஆகக் குறைக்கப்பட்டது.

அதே சமயம் பிப்ரவரியில் 125 புள்ளிகளை எட்டியிருந்தது. ஆனால், மார்ச் மாதத்தில் குறியீடு 1 புள்ளி அதிகரித்து 126 ஆக உள்ளது. மேலும் ஏப்ரலில் வந்த ஏஐசிபிஐ குறியீடு 1% அதிகரித்தது. இதையடுத்து அகவிலைப்படி அதிகரிப்பதற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டில் பணவீக்க எண்கள் மே 31 அன்று வர உள்ளன. இதில், ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்க எண்கள் புதுப்பிக்கப்படும். இந்த எண்ணிக்கை இதுவரை 126 ஆக உள்ளது. தற்போது, அடுத்த அகவிலைப்படி உயர்வு 3% வரை இருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், அடுத்த மூன்று மாதங்களில் குறியீடு இன்னும் ஏற்றம் காட்டினால் DA உயர்வு 4% ஆகவும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!