தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை விரைவில் – ஹாப்பி நியூஸ்!

0
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை விரைவில் - ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை விரைவில் - ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை விரைவில் – ஹாப்பி நியூஸ்!

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த பிரச்சாரத்தில் குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குடும்ப தலைவி

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கிழக்குத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதை தொடர்ந்து, வாக்கு சேகரிப்பதற்காக இத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில் இணையதள வசதி ஏற்பாடு – கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை!

அதன்படி இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் குடும்ப தலைவிகளுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழக முதல்வர் அறிவித்த குடும்ப தலைவிகளுக்கான மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் இத்திட்டம் குறித்து மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!