மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல சான்ஸ் – ஓய்வூதிய முறையை தேர்வு செய்யும் வாய்ப்பு!
மத்திய அரசு பணியாளர்கள் தங்களது பணிக்காலத்திலேயே தங்களுக்கு விருப்பமான ஓய்வூதிய முறைகளை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய விருப்பம்:
மத்திய அரசின் பணியாளர்கள் தங்கள் பணிக்காலத்தில் இருக்கும் பதவிக்கு ஏற்ப ஊதியத்தை பெற்று வருகின்றனர். அவர்களின் பணிக்காலம் முடிந்து ஓய்வுக்காலத்தில் அவர்களின் சம்பளத்திற்கு ஏற்ற வகையில் ஓய்வூதியம் அளிக்கப்படும். மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான ஓய்வூதிய முறையை அதாவது, தேசிய ஓய்வூதிய திட்டம் அல்லது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தேசிய ஓய்வூதிய விதிகளின் படி, 2021 இன் விதி 10-ன் படி, NPS இன் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், அரசுப் பணியில் சேரும் போது, படிவம் 1-ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அதில், தங்களுக்கான பலன்களை தேர்வு செய்து கொள்ளும் விருப்பம் தெரிவிக்கப்படும். அதன்பிறகு, தங்கள் பணிக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளவும், ஓய்வு பெறும் சமயத்தில் அதனை மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பரவி வரும் 700-க்கும் மேற்பட்ட கோவிட் வைரஸ்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!
Follow our Instagram for more Latest Updates
ஆனால், ஓய்வு காலத்திற்கு முன்னதாக ஊழியர் மரணம் அடைந்து விட்டாலோ அல்லது பலன்களை மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியாத நிலையில் இருந்தால், ஊழியர் இறுதியாக செய்யப்பட்ட மாற்றமே இறுதி முடிவாக கருதப்படும். குடும்ப உறுப்பினர்கள் இதனை மாற்றுவதற்கான உரிமையை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.