தமிழகத்தில் இன்று தங்கம் விலை உயர்வு – அதிர்ச்சியில் பெண்கள்.. விவரம் இதோ!
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. மாதத்தின் தொடக்க நாளான இன்று (டிச.01) ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை:
இந்தியாவில் தங்கம் அதிக அளவு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. மேலை நாடுகளை பொறுத்தவரை தங்கம் என்பது ஒரு வகையான முதலீடு மட்டுமே. ஆனால் இந்தியாவில் தங்கத்தால் ஆன அணிகலன்களை அணிவது கலாச்சார வழக்கமாக உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை திடீரென உயர்த்தியது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனால் ஆபரணத்தங்கத்தின் விலை மக்கள் எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது.அதனை தொடர்ந்து தற்போது பங்கு சந்தையில் நிப்டி புள்ளிகள் அதிகரித்து வருவதை அடுத்து தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.152 உயர்ந்து ரூ.39,640-க்கு விற்பனையாகி வருகிறது.
டிச. 3 தமிழகத்தில் மின்தடை எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா?- உங்கள் பகுதியும் இந்த லிஸ்டில் இருக்கா!
Exams Daily Mobile App Download
மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 19 உயர்ந்து ரூ.4,955-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராம் ரூ.1.80 காசுகள் அதிகரித்து ரூ.69.80 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்தாக ஒரு கிலோ வெள்ளி ரூ.1,800 அதிகரித்து ரூ.69,800 ஆக விற்பனையாகி வருகிறது.