தமிழகத்தில் ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – சவரன் ரூ. 44,400க்கு விற்பனை!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ. 44,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வந்த நிலையில் அதிகளவிலான தாய்மார்கள் நகைவாங்குவதில் ஆர்வம் செலுத்தி வந்தனர். அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.6,010க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ. 48,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5540க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ. 44,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கல் – மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி!
இதனையடுத்து, நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதாவது, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.6,020க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ. 48,160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5550க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ. 44,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..