சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு – மாலை நிலவரம்!
தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்றைய (செப்டம்பர் 23) மாலை விற்பனையில் சரிவை எட்டியுள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 வரை குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கம்
பொதுவாக தமிழக மக்களுக்கும், தங்கத்துக்கும் இடையே ஒரு பிணைப்பு இருக்கும். அதாவது நம் ஊரில் தங்க நகைகள் இல்லாமல் எந்தவொரு விஷேச காரியங்களும் நடக்காது. அந்த அளவுக்கு மக்கள் ஆபரணத் தங்கத்தின் மேல் ஆர்வம் உடையவர்களாக இருந்து வருகின்றனர். அதனால் நம் மக்களுக்கு எப்போதும் தங்கத்தின் மீது ஈடுபாடு அதிகம் தான்.
நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அதே நேரத்தில் நகைகளை வாங்க செல்பவர்கள் அன்றைய நாளுக்கான விற்பனை நிலவரத்தை தெரிந்து வைத்து கொள்வது முக்கியமானதாகும். அதன் கீழ் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விற்பனை நிலவரம் காலை, மாலை என நேரங்களிலும் சற்று சரிவை கண்டுள்ளது. அதனால் இன்றைய நாள் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உகந்த நாளாக உள்ளது.
தமிழகத்தில் 3, 5, 8 & 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்!
ஏனென்றால் இன்றைய (செப்டம்பர் 24) மாலை விற்பனை நிலவரத்தின் படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் நகை ரூ.35,064க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4,383க்கு விற்பனையாகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.